Wednesday, 18 November 2015

நேச வைராக்கியம்--jeevavootru.blogspot.com

நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித் தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது - (உன்னதப்பாட்டு 8:6).

புஷ்யோக் என்னும் ரஷ்ய வாலிபன் எப்போதும் புன்சிரிப்புடன் இருப்பான். அவனை காண்பவர்களை கவர்ந்திழுக்கும் உள்ளத்தை உடையவனாய் இருந்தான். மட்டுமல்ல, இனிமையாக பாடி வாத்திய கருவிகளை இசைப்பதில் அவனுக்கு இணை அவன்தான்.
.
அவனது பெற்றோர் அவனை இசைக்கல்லூரியில் சேர்த்தனர். சங்கீதத்தை
முறைப்படி கற்றது மட்டுமல்ல, எல்லா இசைக் கருவிகளையும் திறமையாக
மீட்டுவதிலும் பிரசித்திப் பெற்றவனாக இருந்தான். தன்னோடு சுட படிக்கும்
மாணவன் மூலமாக கிறிஸ்து தம் ஜீவனை கல்வாரியில் எபபடி கொடுத்தார்
என்பதை அறிந்தான். அவன் உள்ளம் கிறிஸ்துவுக்காக பொங்கியது.
கிறிஸ்து தம் ஒரே ஜீவனை எனக்காக அர்ப்பணித்தாரென்றால் ஏன் என்
திறமை தாலந்துகள் எல்லாவற்றையும் அவருக்காக அர்பணிக்கக்கூடாது
என தீர்மானித்தான்.
.
.
அவன் பட்டம் பெறும் நாள் வந்தது. அவனது அருமையான பெற்றோர்கள்
மகிழ்ச்சியோடு, ஒழுங்கு செய்யப்பட்ட பெரிய மண்டபத்தில் காத்துக்
கொண்டிருந்தனர். அவனுடைய ஆசிரியர்கள் பெருமையோடு தம்தம்
ஆசனங்களில் வந்து அமர்ந்தனர்.
.
.
ரஷ்யாவில் நாடோடிப்பாடலான 'பொன் வாத்தின் மதுரக்கீதம்' என்ற
பாடலையே தன் பட்டம் பெறும் பாடலாக தெரிந்தெடுத்தான். தன் முழு
உள்ளத்தையும் அந்த பாடலில் இணைத்து, உருக்கமாக பாடிக் கொண்டே
வந்தான். அந்தப் பாடலோடு கூட அப்படியே கல்வாரியின் கீதத்தையும்
இணைத்து இயேசுவின் அன்பு, அவரது தியாகத்தையும், உருக்கமான
குரலில் பாடி முடித்தான். கல்லைப் போலுள்ள உள்ளங்கள் மெழுகைப்போல
உருகின. அவனது ஆசிரியர்கள் திகைத்தார்கள். அரசாங்க அதிகாரிகள்
உறுமினார்கள். அவன் மெதுவாய் மேடையில் எழுந்து நின்று, உறுதியான
குரலில், 'பாரமான சிலுவையை தம் தோள்களிலே தூக்கிக் கொண்டு
எருசலேம் வீதி வழியாக இரத்த வியர்வையோடு நடந்து, எனக்காக
ஜீவனைக் கொடுதுது, தன் ஜீவனைப் பார்க்கிலும் என்னை அதிகமாக
நேசித்தவரை நான் எப்படி நேசியாமல் இருக்க முடியும்?' என்று கூறினான்.
.
.
அப்பொழுதே அவன் கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டன. அவன்
பெற்றோர் கலங்கி தவித்தனர். அவன் அவர்கள் பக்கமாக திரும்பினான்,
'அம்மா,கல்வாரி கீதத்தோடு என் வாழ்க்கையின் கீதத்தையும் இணைத்துக்
கொண்டதில் நான் பெருமைப்படுகிறேன்' என்றான். மரண தண்டனைக்காக
அவன் நடந்து சென்றான். அவன் நடையில் ஒரு கெம்பீரம் இருந்தது.
.
.
பிரியமானவர்களே, நம் தேவன் மேல் நமக்கு இதுப் போன்ற நேச
வைராக்கியம் உண்டா? கிறிஸ்தவ வாலிபர்கள் பலர், தங்களது
தாலந்துகளை கர்த்தருக்கென்று பயன்படுத்தாமல், தங்கள் விருப்பப்படி
சினிமா பாடல்களுக்கும், மற்ற பாடல்களுக்கும் உபயோகப்படுத்தி
கொண்டிருக்கும் காலத்தில், நாம் நம் பிள்ளைகளுக்கு, தேவனுக்கேற்ற
வைராக்கியத்தை குறித்து போதிக்கிறோமா?

நன்றி : அனுதின மன்னா

No comments:

Post a Comment