கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! கடந்த டிசம்பர் மாதம் (2015) கர்த்தருடைய சமூகத்தில் காத்திருந்தபோது தேவ ஆவியானவர் இந்த 2016 ஆண்டைக்குறித்து சில வெளிப்பாடுகள் மூலமாக கிருபையாக என்னோடு இடைப்பட்டார். அதில் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சங்களை உங்கள் முன் வைக்கிறேன். தேசத்தை இருள் மூடாதபடிக்கு திறப்பின் வாசலில் நின்று கதறுகிற தேவ பிள்ளைகள் உங்கள் ஜெபத்தை அதிகப்படுத்துங்கள்.
இந்திய தேசத்திற்கான வெளிப்பாடுகள்
1. நம்முடைய தேசத்தில் தென்மாநிலங்களின் ஒரு பகுதியில் காரிருள் சூழும், ஜனங்கல் தத்தளிப்போடும் திகிலோடும் இங்கும் அங்கும் அலைகின்ற நிலை உருவாகும். தீயினாலும் சேதம் உண்டாகும்.
2. தென் இந்தியாவைக் குறித்த செய்தி அதிகமாக முழு இந்தியாவின் கவனத்தையும் ஈர்க்கும்.
3. ஒரு பழங்கால வழிபாட்டுதலம் குறித்த செய்தி கேள்விப்படுவீர்கள்.
4. மாடுகளைக் குறித்த சர்ச்சை மீண்டும் பெரிதாகும்.
5. தமிழ்நாட்டில் மதுபானம் தாராளமாய் கிடைக்கும் நிலை குறையும்.
6. நம்முடைய இந்திய தேசத்தின் மேற்கு எல்லைகளிலும் வான் எல்லைகளிலும் போதுமான பாதுகாப்பு இல்லாத நிலையில் இருப்பது வெளிப்படும்.
7. பெண்களில் ஒரு குறிப்பிட்ட சிலர் நம்முடைய இந்திய தேசத்தின் பண்பாட்டை மீறி செய்யும் ஒரு குறிப்பிட்ட செய்கையினால் தேசத்திற்கு நிந்தையாக அமையும்.
8. தமிழ்நாட்டில் ஒரு முதிர்வயதான முக்கிய அரசியல்வாதியைப் பற்றிய செய்தி அனைவர் கவனத்தையும் ஈர்க்கும்.
9. இந்தியாவில் பிறை நிலவை தன் உச்சியிலுடைய ஒரு மத வழிபாட்டுத்தலத்தைக் குறித்து பெரிய அளவில் சர்ச்சை கிழம்பும், அதைத் தொடர்ந்து சீரழிவுகள் உண்டாகும்.
10. இரத்தம் சிந்துதல்களும் உண்டாகும்.
முழு உலகத்திற்கான வெளிப்பாடு
1. அகழ்வாராய்ச்சியின் மூலம் தோண்டி வெளியே எடுக்கப்படுகிற ஒரு ஆதாரத்தை குறித்து பிரபலமாக பேசப்படும்.
2. உலகின் ஒரு பகுதியில் நீரின் வேகம் அசூரத்தனமாக வெளிப்பட்டு தடுப்பாரில்லாமல் ஒரு கூட்ட ஜனங்களை விழுங்கிச் செல்லும்.
3. மரண சம்பவங்கள் அதிகரித்து காணப்படும்.
4. வானத்திலே பலம் வாய்ந்த பெரிய தூதன் தான் பூமியிலே செய்யப்போகிற செயலுக்கு ஆயத்தமாகி பரலோகத்தின் தேவனுடைய உத்தரவுக்கு காத்திருக்கிறதைக் கண்டேன்.
கிறிஸ்துவுக்குள்ளான தேவப் பிள்ளைகளுக்கான வெளிப்பாடுகள்
1. கடந்த காலங்களில் இமைப்பொழுது கைவிடப்பட்ட தம்முடைய ஜனங்கள் மேல் தம்முடைய இரக்கத்தை காண்பிப்பார்.
2. தேவன் தம்முடைய பரிசுத்த அலங்கார ஆடைகளை சிலருக்கு தரிப்பித்து தம்முடைய நாமத்தின் மகிமைக்கென்று வல்லமையாக எழுப்புவார்.
3. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு கடினமாக தடை விதித்திருந்த பகுதிகளில் அல்லது தேசங்களில் தம்முடைய வல்லமையினால் உடைத்து நொறுக்கி திறந்த வாசலை உண்டாக்குவார்.
4. கிறிஸ்து இயேசுவின் இரட்சிப்பை பெறக்கூடாதபடி கடினமான இருதயம் கொண்டவர்களை தம்முடைய வல்லமையினால் மீட்டு இரட்சிப்பார்.
5. கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கங்கள் மத்தியிலும் போராட்டத்தின் மத்தியிலும் உண்மையாக கர்த்தருக்கு காத்திருந்த தேவ பிள்ளைகளுக்கு கர்த்தர் தம்முடைய களஞ்சியத்திலிருந்து அள்ளிக்கொடுத்து ஆசீர்வதிப்பார்.
6. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் கொண்ட தேவ பிள்ளைகளை பயமுறுத்தி வந்த சத்துருவின் வாயைக் கட்டி அடைத்து அமைதலாக்குவார்.
தேவனுடைய நாமம் ஒன்றே மகிமைப்படுவதாக
கர்த்தருடைய ஆவியானவரின் நடத்துதலால்--- சகோ.D.விமலன்
No comments:
Post a Comment